உலக வறுமை ஒழிப்பு தினம்

💠🌀💠🌀💠🌀💠
அக்டோபர் 17 - இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்!

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதி உலக வறுமை ஒழிப்பு தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நாள் 1987 ஆம் ஆண்டுதான் முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. இருந்தபோதிலும் உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிக்கொடுமையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை 1992-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 17-ஐ வறுமை ஒழிப்பு நாளாக  அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது ஏழ்மை நிலைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் எனலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே ஏழ்மை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படுகின்றது.

இருப்பினும் ஏழ்மை நிலை உணவு, சுத்தமான நீர், உடை, தங்குமிடம், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புக்கள், மனித அரசியல் உரிமைகள் தொடர்பான நிலையைக் குறிக்கின்றது.

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்