நடப்பு நிகழ்வுகள் 21/10/2016

இந்தியா

1.பாதர ஸ்டேட் வங்கி நாடு முழுவதும் ஒரே நாளில் சுமார் 6 லட்சம் டெபிட் ஏடிஎம் கார்டுகளை முடக்கியுள்ளது.நாடு முழுவதும் உள்ள பல பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் மையங்களின் பரிவர்த்தனைகளில், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

உலகம்

1.ரஷ்யா இரண்டாவதாக ஓர் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்க  ஒப்புக் கொண்டுள்ளது.
2.இந்தியா, மியான்மர் இடையே பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக, 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
3.அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஆப்பிள்’ நிறுவனத்துக்கு அயர்லாந்து நாட்டின் மிகக் குறைவான வரிவிதிப்புக் கொள்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி தொடர்பான கொள்கையை மீறியிருப்பதால் ஐரோப்பிய ஒன்றியம் 13 பில்லியன் ஈரோ அபராதம் விதித்துள்ளது.

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்