TNTET விண்ணப்ப விநியோகம் நாளை இல்லை...

நம்பாதீர்கள்... நம்பி ஏமாறாதீர்கள்...

ஆசிரியர் தேர்வு எழுத நீங்கள் காட்டும் ஆர்வத்தை பயன்படுத்தி சில நாளிதழ்கள் நாளை முதல் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பள்ளிகளில் விநியோகப்படும் என்று செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தகைய செய்தியை நம்பி நாளை காலை குறிப்பிட்ட பள்ளிக்கு சென்று தேர்வு விண்ணப்பம் வேண்டும் என்று நிற்காதீர்கள். அவர்கள் இன்னும்  விண்ணப்பம் வரவில்லை என்று சொன்னால் அது உங்களுக்கு ஏமாற்றம் அளிக்க கூடியதாக இருக்கும்.

உண்மையில் இதுவரை ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய எந்த முறையான அறிவிப்பையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முறையான அறிவிப்பு தினத்தந்தி போன்ற நாளிதழ்களில் முறையாக வெளியிடப்படும். அதன்பிறகு ஒரு வாரத்தில் குறிப்பிட்ட பள்ளி மையங்களில் விண்ணப்பங்கள் விற்பனை செய்வார்கள்.

இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முறையான அறிவிக்கை வெளியிடப்படாத காரணத்தால் நாளை விண்ணப்பம் வாங்க எங்கும் செல்லாமல் படிக்கும் பணியை மட்டும் கவனியுங்கள்.

என்றும் உங்கள்
அல்லா பக்‌ஷ்

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்