மனுநீதிநாள் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடத்த தடை

மனுநீதி நாள், மக்கள் குறை தீர்க்கும் நாள் நடத்த தடை !

தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளன.
இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல்
அலுவலர்களுடன் மாநில தேர்தல் கமிஷன் இன்று ஆலோசனை நடத்தியது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியது. அதன்படி, அரசு நிதியில் கட்டப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தை தேர்தல் பணிக்காக பயன்படுத்தக் கூடாது. கட்சிகள் அமைப்பு தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. தேர்தல் முடியும் வரை மனுநீதி நாள், மக்கள் குறை தீர்க்கும் நாள் ஆகியன நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி உள்ளது.

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

இரும்பு தொழிற்சாலை பற்றி சில தகவல்கள்